புதுடெல்லி: சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இதில் முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அங்கிருந்து 18-ம் தேதி குரோஷியா சென்றார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை.
அங்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜோரன் மிலனோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பாக 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நானும் குரோஷிய பிரதமரும் இருதரப்பு உறவுகளுக்கு மூன்று மடங்கு ஊக்கம் அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு திட்டம் வகுக்கப்படும்.” இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் என்று பிரதமர் அலுவலகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.