புது டெல்லி: மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருவூலப் பத்திரங்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 2019 முதல், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பல கருவூலப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் மாலத்தீவுக்கு வட்டியில்லா நிதி உதவியை வழங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாலத்தீவு அரசாங்கம் கருவூலப் பத்திரங்களை மீட்டுக்கொள்ள வேண்டிய காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தனி ஒப்பந்தத்தின் கீழ் மாலத்தீவுக்கு அவசர நிதி உதவியாக பத்திரங்களை மீட்டுக்கொள்ளும் காலக்கெடுவை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.