புது டெல்லி: அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் ஒரு அறிக்கையில் கூறியதாவது:- அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, 10 ஆண்டு அமெரிக்க-இந்தியா பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்திட இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இந்த ஆண்டு நடைபெறும் சந்திப்பின் போது கையெழுத்திடப்பட உள்ளது.

இந்தியாவிற்கான அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
பென்டகன் அறிக்கையின்படி, தெற்காசியாவில் அமெரிக்காவிற்கு இந்தியா ஒரு முக்கிய மற்றும் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது என்பதை ஹெக்செத் வலியுறுத்தினார்.