வீட்டில் உணவு சமைப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் குக்கர், அதன் விசில் சத்தம் வழியாக உணவு வெந்ததா என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் சில நேரங்களில் அந்த விசில் இடைவெளியின்றி தொடர்ந்து வரும். இது உணவு வெந்ததா இல்லையா என்பதை யூகிக்க கடினமாக்குகிறது.

இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதைப் பற்றிய காரணங்களை அறிந்து சரி செய்யலாம்.முதலில், நீங்கள் அதிக தீயில் குக்கரை வைத்திருந்தால், விசில் தொடர்ந்து வரும். எனவே மிதமான தீயில் வைத்துப் பாருங்கள். அதே நேரத்தில், குக்கரின் விசில் பகுதியில் எப்போதாவது சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், உணவுத் துகள் அங்கு தங்கி விசில் சரியாக வேலை செய்யாது.
விசில் குழாயை சுத்தம் செய்ய வேண்டும்.மேலும், குக்கர் மூடியை சரியாக பொருத்தவில்லை என்றாலும் விசில் சரியாக வேலை செய்யாது. கேஸ்கெட்டில் பிளவு இருந்தாலும் இதுவே காரணமாகலாம். மூடியின் நிலைமை மற்றும் பீலிங் எல்லாம் சரியாக உள்ளதா என்பதை கவனியுங்கள்.அதற்குபின், சமைக்கப்படும் உணவுக்கு தேவையான அளவு தண்ணீர் மட்டுமே ஊற்ற வேண்டும்.
அதிகதண்ணீர் இருந்தால் விசில் இடைவெளியின்றி வரும்.இவை அனைத்தையும் சரிசெய்த பிறகும் பிரச்சனை தொடருமானால், அது உள் அழுத்தம் கட்டுப்பாட்டில் கோளாறு என அர்த்தம். தொழில்நுட்ப உதவி பெறுவது அவசியம்.சிறிய கவனிப்புகளால் குக்கர் பிரச்சனைகளைத் தடுக்கலாம். இது உணவு நன்கு சமைக்கப்பட உதவும் மற்றும் கிச்சன் வேலை நேரத்தைச் சுலபமாக்கும்.