ஆடாதோடை இலையின் பயன்கள்
சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற சுவாச கோளாறுகளுக்கு, இந்த ஆடாதொடை இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால், காய்ச்சல் மெல்ல மெல்ல குறைய துவங்கும்.. ஆடாதோடை இலைகள், வேப்பிலையை போல கசப்பு தன்மை வாய்ந்தவை.. ஆனால், வேப்பிலையை போலவே, பல நன்மைகளை தரக்கூடியவை. இந்த இலைகளை வெறும் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால், நம்முடைய வயிறு சுத்தமாகும்.. வயிற்றிலுள்ள பூச்சிகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்.
பெண்களுக்கு இந்த இலைகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. முக்கியமாக, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடித்து இலையை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வரும்போது, உதிரப்போக்கு கட்டுக்குள் வரும். அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு இந்த செடியின் வேர்களிலிருந்து கசாயம் போல தயார் செய்து, 8வது மாதம் முதல் குடிக்க தருவார்கள்.. இதை குடித்து வரும்போது, கருப்பை பலப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது..