முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் மாற்றம்
முருங்கைக்காய் ஒரு மலிவான மற்றும் அதிக சத்துள்ள காயாகும். முருங்கை மரத்தின் காய்கள், இலைகள், பூக்கள் என அனைத்துப் பகுதிகளும் பல மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளன. காய்கள் மற்றும் இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
மலச்சிக்கல், வயிற்றுப்புண் மற்றும் கண் நோய்களுக்கு முருங்கை காய் மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல பலம் தரும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் வலுவடைந்து தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரம் இருமுறையாவது முருங்கைக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தமாகும்.
முருங்கை விதைகளை குழந்தைகள் சாப்பிட்டால் குடலில் உள்ள கிருமிகள் வெளியேறும். மலச்சிக்கல், மூல நோய், ஜலதோஷம், ரத்தசோகை, வயிற்றுப் புழு, கணையம், கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. ஆண்களுக்கு முருங்கைக்காயை தொடர்ந்து உட்கொள்வது ஆண்மைத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
முருங்கைக்காய் கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் போன்றவற்றுக்கு நல்லது. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய அழற்சி போன்றவற்றை குணப்படுத்துகிறது.