சியா விதைகள் ஒரு சூப்பர் ஃபுட் என்று பரவலாக அறியப்படும். இதில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் பலர் இதை தவறாகவே பயன்படுத்துகிறார்கள். சியா விதைகள் ஹைட்ரோஃபிலிக் தன்மையுள்ளவை, அதாவது தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் சக்தி கொண்டவை.
இவை தண்ணீரில் ஊறவைக்கும் போது தனது எடையின் 12 மடங்கு திரவத்தை உறிஞ்சி, ஒரு ஜெல் தோற்றத்தை உருவாக்குகின்றன. இதை உணவில் சேர்க்கும் முன் குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைத்தால் மட்டுமே இதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.உலர்ந்த சியா விதைகளை நேரடியாக சாப்பிடுவது நல்லது அல்ல. அது உடலில் உள்ள திரவத்தை உறிஞ்சி மலச்சிக்கல் அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும், அதன் ஊட்டச்சத்துக்கள் செரிமானமாகாமல், வீணாகிவிடும்.சியா விதைகளை எப்போதும் தண்ணீர், பால் அல்லது பாதாம் பால் போன்ற திரவங்களில் ஊறவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். ஒரு நாள் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போதும். அதிகமாக எடுத்துக்கொள்வது எடையை குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கக்கூடும்.இவற்றை எலுமிச்சை நீர், கிரீக் யோகர்ட், பெர்ரிகள் அல்லது ஓட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
இது செரிமானம் மற்றும் ஆற்றலை மேம்படுத்தும்.பலர் சியா விதைகளை இனிப்பு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இது ரத்த சர்க்கரையை பாதிக்கக்கூடும். அதனால் தேன், மேப்பிள் சிரப் போன்றவற்றுடன் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.சரியான முறையில் சியா விதைகளை எடுத்தால் பசியைக் குறைத்து, உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் சியா விதைகள் ஒரு மாயை மருந்தல்ல. சரியான வாழ்க்கை முறை, தினசரி நடைப்பயிற்சி, போதுமான தண்ணீர் குடிப்பு ஆகியவை இத்துடன் முக்கியமாக உள்ளன.உடலை சுத்தமாக வைத்துக் கொண்டு, தினமும் சீரான முறையில் சியா விதைகளை எடுத்தால் எடை குறைப்பு நிச்சயமாக சாத்தியமாகும்.