அரவக்குறிச்சி: புகழூர் நகராட்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளர் இளங்கோ பேச்சு.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை நின்று வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகழூர் நகராட்சி பகுதியில் உள்ள செம்படபாளையம், சாலைத்தோட்டம், புகழூர் நான்கு ரோடு, முருகன் பாளையம், பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளரை அப்பகுதி பொதுமக்கள் சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வாகனத்தின் பேசிய அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்:
ஐந்தாண்டு காலங்களில் அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலைவாய்ப்புக்காக மலைக்கோவிலூர் பகுதியில் சிப்காட் கொண்டுவரப்பட்டுள்ளது, பேரூராட்சியாக இருந்த புகழூரை நகராட்சியாக தரம் உயர்த்தி 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது புகலூர் மக்கள் கேட்டதை அனைத்தும் நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்துள்ளார்.
மேலும் ஒப்பந்த பணியாளர்கள் 566 நபர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பணி நிரந்தரம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது சட்டமன்றத்தில் எடுத்துரைத்த அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன், சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ பேசும்பொழுது காலணி என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கூறினார் அடுத்த நிமிடமே முதல்வர் எழுந்து அந்த சொல்லை நம் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்
இதுவரை உங்கள் பகுதி மக்களுக்காக கிராமங்களில் 65 சமுதாயக் கூடங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன் எனக் கூறினார்.