சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்!
* பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.1 லட்சம் பிணையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
* இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத உதயநிதி ஜூன் 25-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்
* நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பெங்களூரு நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
* கடந்தாண்டு சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.