By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனா, வங்கதேசத்தில் நிலநடுக்கம்
    0 Min Read
    ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
    1 Min Read
    உங்கள் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்… வெனிசுலா அதிபர் திட்டவட்டம்
    1 Min Read
    இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க ஆலோசிக்கப்படும்… ரஷ்யா தகவல்
    1 Min Read
    இம்ரான் உயிருடன்தான் உள்ளார்… ஆனால்: சகோதரி கூறிய அதிர்ச்சி தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்திய கடற்படை தினம்… பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    1 Min Read
    எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
    0 Min Read
    விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
    1 Min Read
    இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்… இந்தியா வழங்கி நிவாரணப் பொருட்கள்
    1 Min Read
    கர்நாடகாவில் சித்தராமையா-சிவக்குமார் சந்திப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய் சாறு அளிக்கும் நன்மைகள்
    1 Min Read
    உணவில் பூண்டை அதிகளவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
    1 Min Read
    சூப்பரான சத்தான கேரட் டிரை ஃப்ரூட்ஸ் சாதம் எப்படி செய்வது?
    1 Min Read
    சூப்பரான கோதுமை வெங்காய போண்டா எளிதாக செய்யலாம் வாங்க!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேர்தலில் உழவர்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்… பாமக தலைவர் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தேர்தலில் உழவர்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்… பாமக தலைவர் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

தேர்தலில் உழவர்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்… பாமக தலைவர் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: October 4, 2025 3:35 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: தி.மு.க. அரசின் கொள்கைகளால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்கள், வரும் தேர்தலில் தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவார்கள் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்து கொண்ட மராட்டியத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலமாக திகழ்வது தமிழ்நாடுதான். அனைத்துத் தரப்பு மக்களும் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதற்கு இதுதான் மோசமான சான்று ஆகும்.

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 631 விவசாயிகள். அவர்களில் 564 பேர் வேளாண்மையை மட்டுமே தங்களின் ஒற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித்தொழிலாளர்கள் ஆவர். 43 பேர் சொந்த நிலத்தில் வேளாண்மை செய்பவர்களும், 24 பேர் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்களும் ஆவர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 40 பேர் பெண்கள் ஆவர். விவசாயிகள் தற்கொலைகளைப் பொறுத்தவரை மராட்டியம், கர்நாடகம், ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. உழவர்கள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது.

அதற்கு முன் 2022-ம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உழவர்களின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது உழவர்களால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததுதான்.

விவசாயிகளின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய வல்லுனர் குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்தக் குழு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், இந்தியாவில் முழுக்க முழுக்க உழவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.27 மட்டும் தான் வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக வேளாண் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை; கொள்முதல் விலை சொல்லிக் கொள்ளும்படியாக அதிகரிக்கவில்லை; அதனால் விவசாயிகள் படிப்படியாக கடன் வலையில் சிக்கி, இப்போது மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொண்டதாகவும் அக்குழு அதன் இடைக்கால அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.

கடன் சுமை அதிகரித்து விட்டதால் தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள அந்தக் குழு, விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உழவர்களின் நலன்களைக் காக்க ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா? என்றால் இல்லை என்பது தான் எதார்த்தமான பதில் ஆகும்.

முந்தைய அ.தி.மு.க. அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதியில் 16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியிருந்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அடுத்த சில காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை அடுத்து பொறுப்பேற்ற தி.மு.க. அரசு தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்தால் பயிர்க் கடனகள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., முந்தைய ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் பாதியைக் கூட செயல்படுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றியது.

தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு பாசனத் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை; நெல்லுக்கான கொள்முதல் விலையுடன் இணைத்து வழங்கப்படும் ஊக்கத்தொகையை கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.81 மட்டுமே தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் ஒரு குவிண்டால் நெல் கொள்முதல் செய்ய பணமாகவும், நெல்லாகவும் ரூ.275 வரை பறித்துக் கொள்கின்றனர்; கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று வரை அக்கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை.

இதுபோல் உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசிற்கு வரும் தேர்தல் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

கர்நாடகா அரசியல் குழப்பம்… நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் தயக்கம்

திமுக ஆட்சியில் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லை… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

கனமழை பெய்த போதும் பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை: அன்புமணி கேள்வி

TAGGED:Assembly ElectionsdemandDMK GovernmentfarmersPMK leaderஉழவர்கள்கோரிக்கைசட்டமன்றத் தேர்தல்திமுக அரசுபாமக தலைவர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?