சென்னை: பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை நேற்று இரவு அளித்த பேட்டி:- பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த பாம்பன் புதிய பாலம் சீரமைப்பது குறித்து மதுரையில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் கேட்டபோது, அதில் எந்த தவறும் இல்லை என்றார். தொங்கு பாலம் வடிவமைக்கப்பட்ட விதத்தில், ரயில் கடந்து சென்ற பிறகு, பாலம் மேலே செல்கிறது. ரயில் முழுவதுமாக கடைசி பெட்டி வரை சென்ற பிறகுதான் மீண்டும் இயக்க முடியும். அப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. அதனால் பாலத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டீர்களா என்று கேட்கிறீர்கள்.

யூகத்தின் அடிப்படையில் வெளியான தகவல் இது. அத்தகைய அனுமதி கோரப்படவில்லை. அவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.