சென்னை: மன்மோகன் சிங் இறுதிச் சடங்கை அவரது நினைவு இடத்திற்கு ஏற்ற இடத்தில் நடத்த அனுமதி மறுத்தது மன்மோகன் சிங்கின் உயர் மாண்மையும், சீக்கிய சமூகத்தையும் அவமதித்ததாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மன்மோகன் சிங் இறுதிச் சடங்கை அவரது நினைவு இடத்திற்கு ஏற்ற இடத்தில் நடத்த அனுமதி மறுத்தது மன்மோகன் சிங்கின் உயர் மாண்மையும், சீக்கிய சமூகத்தையும் அவமதித்ததாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.
மன்மோகன் சிங் தலைமையின் கீழ் லடசக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீண்டனர். டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை பொருளாதாரத்தை மாற்றியது. சிறந்த தலைவர்களை அவமதிப்பதன் கறை ஒருபோதும் வரலாற்றிலிருந்து மறையாது. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.