புதுடெல்லி: பாஜக ஆட்சியில் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது, “பட்ஜெட் மூலம் பாஜக அரசு வெற்றி முழக்கங்களை கொடுக்காமல், திட்டங்களை கொடுத்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்த மீட்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.