சென்னை: உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை-சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார். இன்று கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கையை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.