By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு… விசா விண்ணப்பதாரர்கள் வலைத்தள கணக்குகள் கண்காணிப்பு
    1 Min Read
    சவுதி அரேபியாவில் லாட்டரியில் இந்தியருக்கு அடித்த யோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதாக தகவல்
    1 Min Read
    இந்திய கடற்படை தினம்… பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    1 Min Read
    எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
    0 Min Read
    விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
    1 Min Read
    இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்… இந்தியா வழங்கி நிவாரணப் பொருட்கள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க மீண்டும் முயற்சி?
    1 Min Read
    தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்
    2 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அகத்திக்கீரை
    1 Min Read
    மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்ய உதவும் நெல்லிக்காய் ஜூஸ்
    1 Min Read
    மருதாணி இலையில் இவ்வளவு …மருத்துவ குணங்களா !
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வீரமணி வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வீரமணி வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வீரமணி வலியுறுத்தல்

Nagaraj
Last updated: August 12, 2025 10:31 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.

2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்! வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர். பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.

”அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே நமது இலக்கு” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.

நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். ‘நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்’ என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே!

எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம். இது அவசிய அவசரமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தமிழ்நாட்டின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி: செல்வப்பெருந்தகை கண்டனம்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

வேளச்சேரி, கிண்டியில் சாலையில் தண்ணீர் தேங்கவில்லை… அமைச்சர் பெருமிதம்

இம்ரான் உயிருடன்தான் உள்ளார்… ஆனால்: சகோதரி கூறிய அதிர்ச்சி தகவல்

கர்நாடகா அரசியல் குழப்பம்… நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் தயக்கம்

TAGGED:Chief MinisterdemandnecessaryProtestSanitation Workersஅவசியம்கோரிக்கைதூய்மைப்பணியாளர்கள்போராட்டம்முதலமைச்சர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க மீண்டும் முயற்சி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?