சென்னை: உலகப் பொருளாதார மன்றம் 2025 கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலக வணிக நிறுவனங்களின் தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். உலகப் பொருளாதார நிலை, வணிக மாற்றங்கள், மாறிவரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்கள் இந்த மாநாட்டில் அதிக அளவு முதலீட்டை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது தெரியவில்லை. இந்த கூட்டத்திலும் மற்ற மாநிலங்கள் தீவிர முயற்சி எடுத்து முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாதது வருத்தம் அளிக்கிறது.

இது, செயல்தலைவர் ஸ்டாலின் கூறுவது போல், ‘தமிழகத்துடன் போட்டி போட்டு பலர் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என்பதையே காட்டுகிறது. உண்மையான முதலீட்டாளர்கள் தமிழகத்தை நாடிச் செல்வதாகத் தெரியவில்லை. நமது ஆட்சியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி எவ்வளவு முதலீடு ஈர்த்தது என்றும், வெளிநாடுகளுக்கு 4 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு எவ்வளவு ஈர்க்கப்பட்டுள்ளன.
தற்போது, டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் எத்தனை முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. உண்மையில் இதுவரை எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.