ஆவணமின்றி எடுத்து வந்த 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
விருதுநகர்: விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சத்திரரெட்டியபட்டி விலக்கு பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் நடராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து தனியார் செக்யூரிட்டி நிறுவன ஜீப்பில் ரூ.4.09 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகளும், ரூ.4.28 லட்சம் மதிப்புள்ள 5.5 கிலோ வெள்ளி நகைகளும் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளுக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.