June 16, 2024

கரூரில் இருந்து நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி-மாநில அளவில் முதல் பரிசு வென்று அசத்தல்

இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வானவில் அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் கலந்து கொண்டார். பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் தேர்வு பெற்ற இந்த மாணவி அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் “காற்றின் அழுத்தம் மற்றும் நீர் அலாரம்” என்ற தலைப்பில் இவர் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு முதல் பரிசை பெற்றது. இந்த பரிசு பெற்றமைக்காக இவர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் கல்வி சுற்றுலா செல்ல உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]