கவுன்சிலர் செய்த நூதன போராட்டம்
ஆற்காடு : கவுன்சிலர் செய்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் சஸ்பென்ட் காலம் முடிந்தும் கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்காததை கண்டித்து கவுன்சிலர் ஒருவர் கையில் பெட்ரோல் கேன் மற்றும் கயிறை வைத்துக் கொண்டு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.