இந்திய குடியரசு தலைவர் மகளிர் தின வாழ்த்துக்கள்
புதுடில்லி: ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் விளையாட்டு முதல் அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இளம் பெண்களின் பாதையில் எஞ்சியிருக்கும் தடைகளை நீக்கி, அவர்களுக்கு சிறகுகளை வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், ஏனென்றால் அவர்கள் நாளைய இந்தியாவை வடிவமைப்பார்கள் என்று குடியரசு தலைவர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.