ஹூக்ளி நதிக்கு அடியில் அமைந்த சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை
கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஹூக்ளி நதிக்கு அடியில் 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாட்டிலேயே முதல்முறையாக நடைபெற்றது. ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து எஸ்பிளனேட் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.