வரும் 26ம் தேதி 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்
புதுடெல்லி: வரும் 26ம் தேதி 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பிரதமர் மோடி வரும் 26ம் தேதி காணொலி காட்சி மூலம், மும்பை-கோவா, பெங்களூரூ-ஹுப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர் மற்றும் போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களை தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.