இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் பிரதமர்
புதுடில்லி: ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பணி ஆணைகளை வழங்கிய பின்னர், ஆணையை பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடுகிறார். இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள்.