மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. வந்தது புது வசதி…!!
SBI நிறுவனத்திடமிருந்து “IRIS ஸ்கேனர்” எனும் அடையாள வசதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. வங்கி அதிகாரியின் அருகே “IRIS ஸ்கேனர்” வசதி உள்ளதால் மூத்தக்குடிமக்கள் பிரிவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு போக வேண்டிய அவசியமில்லை. இவ்வசதிக்கு பின் அவர்கள் அருகிலுள்ள பேங்க் மித்ரா மையத்தில் இருந்தே ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ளலாம். SBI வெளியிட்ட அறிக்கையில் அதன் பேங்க் மித்ரா ஆபரேட்டர்களுடன் ஐஆர்ஐஎஸ் ஸ்கேனரை நிறுவுவதை சோதனை செய்து வருவதாக கூறப்பட்டது. இது மூத்தக்குடிமக்கள் கணக்கு வைத்திருப்போர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சிரமங்களை குறைக்கும்.