சென்னை: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியதாவது:- மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை சாதனையாகும்.

ஜூலை மாதத்தில், QR குறியீடு முறையைப் பயன்படுத்தி 45 லட்சத்து 66 ஆயிரத்து 58 பேரும், பயண அட்டைகளைப் பயன்படுத்தி 6 லட்சத்து 55 ஆயிரத்து 991 பேரும், சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி 51 லட்சத்து 56 ஆயிரத்து 786 பேரும் பயணம் செய்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.