கரூர்: தவெக கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 6 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 1 நபரும் என மொத்தம் 6 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.