சென்னை: இந்தியா முழுவதும் விற்கப்படும் அனைத்து வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்களால் சோதிக்கப்படுகின்றன. ஆய்வின் போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பாக்டீரியா தொற்று, செரிமானக் கோளாறு, சளி, வைட்டமின் குறைபாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது.

அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. இந்த விவரங்கள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பொதுமக்கள் அந்த இணையதளத்தில் சரிபார்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.