சென்னை: தமிழக அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய கால கடனாக ரூ. 206 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகம், அரசுக்கு 2023 ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்குவதற்காக ரூ. 206.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை பரிசீலித்த அரசு, 2017-ம் ஆண்டுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்களை வழங்க குறுகிய கால கடனாக (WMA) ரூ. 206.63 கோடி ஒதுக்கி ஆணையிடுகிறது. இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களிடம் வழங்க வேண்டும். கடனை 2024-25 நிதியாண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.