மதுரை: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடி கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவை மாற்றக் கோரியும், மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.