சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் 20.08.2025 வரை நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். படிப்புகளை வழங்கும் 300 இடங்கள் உள்ளன.

2025-26-ம் கல்வியாண்டிற்கான இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கும். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாமாண்டு வகுப்புகள் “இது 01.09.2025 முதல் தொடங்கும்” என்று அவர் கூறினார்.