சென்னை: கோயம்பேட்டில் இருந்து அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்திற்கு திருப்பி விடப்பட்ட நிலையில், ஒரு சில போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட போதும், தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டதால் நெரிசலைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. இந்நிலையில் கிளாம்பாக்கம் வரை மட்டுமே பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:- தாம்பரம் போக்குவரத்துக் காவலர் பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளும் மார்ச் 4-ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் மற்றும் 3795 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், 104 கூடுதல் பேருந்துகளும், 815 ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.