சென்னை: நாளை 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம், விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகை , திருவாரூர்,நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது