தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாளர்கள் வருகின்றனர்.
மழை தொடர்பான பொதுமக்கள் பாதிப்புகள், வடகிழக்கு கோரிக்கைகளை கட்டணமில்லா தொலைபேசி எண்- 04362-230121 வாட்ஸ்அப் எண்-9345088997 கட்டுப்பாட்டு பணி புரிந்து பருவமழை தெரிவிக்க தொலைபேசி 88997 என்றஎண்களை பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பேரிடர் தொடர்பாக TN Alert என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த கைபேசி செயலியினை Google Play Store மற்றும் iOS App Store -இல் பதிவிறக்கம் செய்து, தங்களது பகுதியில் மழை போன்ற வானிலை முன்னறிவிப்பு செய்திகளை தெரிந்து கொள்ளலாம். புகார் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவித்திடலாம்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 மழைமானிகள். 19 முன்னெச்சரிக்கை ஒலியெழுப்பும் கருவிகள் செயல்பாட்டில் உள்ளது. 4550 முதல்நிலை மீட்பாளர்கள், 300 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் தயார்நிலையில் உள்ளனர் மற்றும் அனைத்து துறைகளும் தயார்நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.