சென்னை: துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. முதல் கட்டத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நல உதவி ஆணையர் ஆகிய 6 பணியிடங்களில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
பட்டதாரிகள் இந்தத் தேர்வை எழுதலாம். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 35 மற்றும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 39 ஆகும். இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30. முதல் கட்டத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov) விரிவாகப் பார்க்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் எஸ்.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதன்முறையாக குரூப்-1 தேர்வில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் இடம் பெற்றுள்ளார். முன்னதாக, தொழிலாளர் மேலாண்மை பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. தற்போது குரூப்-1 தேர்வில் இந்த பதவி இடம் பெற்றுள்ளதால், அந்த தேர்வுக்கான வயது வரம்பும் இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தொழிலாளர் மேலாண்மை படித்தவர்களுக்கு முன்பு போல் தொழிலாளர் உதவி ஆணையர் பணிக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.