சென்னை: இது தொடர்பாக, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பிரதான குழாய் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும், எனவே, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள சில பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் 25-ம் தேதி காலை 8 மணி வரை குழாய் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சௌக்கர்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், திருவல்லிக்கேணி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக போதுமான குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீரைப் பெற, வாரியத்தின் வலைத்தள முகவரியான https://cmwssb.tn.gov.in ஐப் பயன்படுத்தி பதிவு செய்து பெறலாம். மேலும், தண்ணீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தம் உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் வழக்கம் போல் எந்தவித இடையூறும் இல்லாமல் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.