சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொதுவாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். காலையில் லேசான மூடுபனி பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். பொதுவாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்., 23 மற்றும் 24-ல் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலையில் லேசான மூடுபனி பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக காலையில் லேசான மூடுபனி காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.