கொடைக்கானல்: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா வரும் 24-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறும். மேலும், முதல் முறையாக, மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் துறையும் மன்னவனூர் ஏரிப் பகுதியில் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராட்சத பட்டம் விழாவை நடத்துகின்றன.

பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கையைப் பாதுகாத்தல் என்ற கருத்துகளுடன் இந்த விழா நடைபெறும். இந்த விழாவைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் முதல் முறையாக காற்றாடி விழா நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.