சென்னை: வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபடுவதாக 2020-ம் ஆண்டு தினசரி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல பெஞ்ச் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனுடன் தனி நபர் வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத் துறை அதிகாரி அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பித்ததில், “வேளச்சேரி ஏரியின் உண்மையான பரப்பளவு 107.48 ஹெக்டேர். அரசுத் துறைகளுக்கு ஏரி பகுதிகள் ஒதுக்கப்பட்டதால், 22.4 ஹெக்டேராக குறைந்துள்ளது. ஏரியின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளது. பல்வேறு வடிகால்களில் இருந்து நான்கில் ஒரு பங்கு சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் ஏரியில் விடப்படுகிறது. இந்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், “வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரூ.23 மதிப்பில் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம்.

சிஎம்டிஏ சார்பில் ஒரு கோடியே 50 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வழக்குகள் பெஞ்ச் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘‘வேளச்சேரி ஏரியில் 962 ஆக்கிரமிப்பு வீடுகள், 54 வணிக கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்க பயோமெட்ரிக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்று இடங்களை வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக அமர்வின் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் உறுதியளித்ததை தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.