டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு, டிச., இன்று துவங்கி, 13-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு, மொத்தம், 90 காலி பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது.

தமிழ் ஆப்டிட்யூட் தாள் மற்றும் பொது அறிவு தொடர்பான 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இருக்கும். இந்தத் தேர்வு எழுத 1,988 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 10 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 19 தலைமை தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.