சென்னை: நேற்றைய தரவுகளின்படி, வங்காள விரிகுடாவில் காற்று சுழற்சி தமிழகத்திற்கு அருகில் இருப்பதால், ஈரோடு பகுதியில் பிற்பகலில் மழை பெய்தது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மேற்கு பகுதிகளில், நேற்று மதியம் மழை பெய்தது.
இன்றைய வானிலையின்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை இன்றும் நாளையும் தொடரும். இது ஈரோடு, நீலகிரி மற்றும் வயநாடு வழியாக மருதமலை பகுதிக்குள் நுழையும் என்பதால், இன்று திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், பாலக்காடு கணவாய் வழியாக குளிர் காற்று, மேற்கு மற்றும் வடக்கு திசை காற்று வீசுவதால், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம், மடத்துக்குளம், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் மழை பெய்யும். ஆந்திர எல்லை, வங்காள விரிகுடா, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
இந்த மழை இன்று மதியம் தொடங்கி நாளை காலை வரை நீடிக்கும். 20-ம் தேதி வரை தொடரும். இந்த மழையின் போது, அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21-ம் தேதி மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் தொடர்ந்து மழை பெய்யும்.