இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால், தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்காள விரிகுடா, வடக்கு அந்தமான், ஆந்திர கடற்கரை, தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், மத்திய மேற்கு அரேபிய கடலின் பெரும்பாலான பகுதிகள், தென்மேற்கு அரேபிய கடலின் சில பகுதிகள், மத்திய கிழக்கு அரேபிய கடலின் பெரும்பாலான பகுதிகள், கொங்கன் – கோவா – கர்நாடகா – கேரள கடற்கரை மற்றும் லட்சத்தீவு – மாலத்தீவுகள்.
இன்றும் நாளையும் மணிக்கு அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.