இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். 10-ம் தேதி கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் உள்பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 11-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும், 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.