இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குஜராத்-வடக்கு கேரள கடற்கரையை ஒட்டி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும், தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள். சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடைவிடாமல் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 12 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருநெல்வேலி மாவட்டம் நாலுமூக்கு, ஊத்து ஆகிய இடங்களில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, பார்வூட், கோவை மாவட்டம் வால்பாறை, சின்சோனா, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.