சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் இறந்த 60 வயது நபருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது ஆனால் கட்டாயமில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம். இணை நோய்கள் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸின் தொடர்ச்சியான பிறழ்வு காரணமாக, மே 5, 2023 வரை அவசர நிலை இருந்தது. தற்போது பரவி வரும் கொரோனா அவ்வளவு கொடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல் மற்றும் இருமலின்போது முகத்தை மூடுதல் போன்ற வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றினால் போதும்.
பீதி அடைய வேண்டாம். தற்போது பரவி வரும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று அவர் கூறினார்.