சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 214 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் உத்தரவுப்படியும், போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தலின்படியும், 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் மேற்கண்ட பேருந்து சேவையைப் பயன்படுத்துமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.