சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளார். 1975-ம் ஆண்டு வெளியான கே. பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
இதுவரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரது 171வது படமான கூலி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பலர் ரஜினிகாந்தை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று வெளியிடப்பட்ட எக்ஸ்-தள ஒரு பதிவில், “திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கும் எனது அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எனது பாராட்டுகள், 1975-ம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமாகி, தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ படம் வரை 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியுடன் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.