சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை வருமாறு:- தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) கட்டாயமாக்கிய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பி.ஆனி பாக்கிய ராணி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் கலந்து கொண்ட கல்வித் தகுதி, கல்வி நிறுவன விவரங்களை அடுத்த விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை தனித்தனியாக பூர்த்தி செய்து, நீதிமன்ற விசாரணைக்கு பதில் மின்னஞ்சல் மூலம் இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.