கோவை: கட்சி நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி மேற்கு மண்டல கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மட்டுமின்றி திருப்பூரில் ஈரோடு போன்ற மேற்கு மாவட்ட தொகுதிகளுக்கு கட்சி நிர்வாகிகளை அழைத்து வர சட்டவிரமாக அரசு பேருந்துகளை திமுக அரசு பயன்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக கோவை மட்டும் இன்றி மேற்கு மாவட்ட பகுதிகளில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல் பல இடங்களில் பேருந்துகளுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது
அரசு பேருந்துகளை தனது கட்சி தொண்டர்களை அழைத்து வர பயன்படுத்தப்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்ல பேருந்துகள் இன்றி பயணிகள் 5 மணி நேரமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்
இருப்பினும் பேருந்து வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மணிக்கணக்காக பொதுமக்களை காக்க வைக்கப்பட்டதால் அவதி அடைந்து பேருந்து பயணிகள் ஆளும் திமுக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பொதுமக்களில் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் அரசு நிர்வாகத்தில் இந்த அலட்சியத்திற்கு கடுமையான அதிருப்தி தெரிவித்த நிலையில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.