சென்னை: 10, +1 மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மார்க் சீட் வழங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து 10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளம் மூலம் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் கோரி நாளை(மே 20) முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.