சென்னை: இன்று முதல் ஜூன் 28 வரை தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, இன்று முதல் 28 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாறு, சின்கோனா, வால்பாறை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு மற்றும் வேலூர் மாவட்டத்தில் பொன்னை அணையில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.